உயிர்க்கொல்லி ‘ஹண்டாவைரஸ்’ (Hantavirus) தொற்று பரவிய சொகுசுக் கப்பலில் சிக்கியிருந்த நான்கு கனடியர்கள் பாதுகாப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
MV Hondius என்ற சொகுசுக் கப்பலில் பயணம் செய்தபோது, அங்கு பரவிய ஹண்டாவைரஸ் தொற்றால் மூன்று பயணிகள் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தக் கப்பலில் இருந்த பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த நான்கு பயணிகள் நேற்று மத்திய அரசின் சிறப்பு விமானம் மூலம் வான்கூவர் நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்களுக்குத் தற்போது நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் 42 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு (Self-isolation) உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள நான்கு பேரையும் உள்ளூர் சுகாதாரக் குழுவினர் தினசரி கண்காணிப்பதுடன், அவர்கள் பொதுமக்களுடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
