ஹாமில்டனில் ஒரு வீட்டு உரிமையாளர், நான்கு குத்தகைதாரர்களை சட்டவிரோதமாக வெளியேற்றிய குற்றத்திற்காக $100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நான்கு குத்தகைதாரர்களில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த ஒரு மூத்த குடிமகனும் அடங்குவார்.
ஒன்டாரியோவின் குடியிருப்பு குத்தகைச் சட்டத்தின் கீழ் (Residential Tenancies Act), வீட்டு உரிமையாளர் நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
இந்த பெரிய அபராதத்தை நீதிபதி லிண்டா கிராஃபோர்ட், விதித்தார்.
மற்ற வீட்டு உரிமையாளர்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க இது போன்ற அபராதங்கள் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
