நாட்டின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஆர்க்டிக் எல்லைக் கண்காணிப்பு முதலானவற்றைப் பலப்படுத்துவதற்காக, பல பில்லியன் டொலர் செலவில் அதிநவீன ரேடார் விமானங்களை (Radar Planes) வாங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கனடிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் விடுத்துள்ள அறிவிப்பின்படி, நாட்டின் பழைய கண்காணிப்பு விமானங்களுக்குப் பதிலாக புதிய விமானங்களை வாங்க அமெரிக்காவின் போயிங் (Boeing) மற்றும் ஸ்வீடனின் சாப் (Saab) ஆகிய இரண்டு நிறுவனங்கள் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
“நமது வடக்கு, வலிமையானது மற்றும் சுதந்திரமானது” (Our North, Strong and Free) என்ற கனடாவின் புதிய பாதுகாப்பு கொள்கையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்க்டிக் பகுதிகளில் ரஷ்யா மற்றும் சீனாவின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கு, இந்த அதிநவீன ரேடார் விமானங்கள் மிக அவசியமானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் 2027-ஆம் ஆண்டில் கையெழுத்தாகும் என்றும், 2030-களின் தொடக்கத்தில் இந்த விமானங்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


