Pipeline எனப்படும் குழாய்த்திட்டங்கள் மற்றும் இயற்கை வளத் திட்டங்களை அனுமதிப்பதில் உள்ள காலதாமதத்தைக் குறைத்து, பணிகளை விரைவுபடுத்துவதற்கான புதிய சட்டத் திருத்தங்களைப் மத்திய அரசு அறிவிக்கவுள்ளது.
இதன்மூலம் பெரிய அளவிலான உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் முறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, இனி ஒரு திட்டத்திற்கு ஒரே ஒருமுறை மட்டுமே ஆய்வு நடத்தப்படும் (One Project, One Review) என்ற கொள்கை அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் (Two-year timeline) அந்தத் திட்டம் குறித்த இறுதி முடிவை அரசு அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.
பல ஆண்டுகள் தாமதப்படுத்தப்பட்டு அனுமதி வழங்கும் முறையே தற்போது அமுலில் உள்ளது.
அந்த முறையை மாற்றி, இரண்டு ஆண்டுகளுக்குள் திட்டங்களுக்கான பணிகளைத் தொடங்க வழிவகை செய்யப்படும் என, மத்திய அரசுத் தரப்பு தெரிவிக்கின்றது.
