Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் பனிப்பொழிவை அகற்ற எட்டு நாட்கள் தேவை.

பிப்ரவரி 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் பனிப்பொழிவை அகற்றுவதற்கு எட்டு நாட்கள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர நிர்வாகம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் இரண்டு தடவைகள் பாரிய பனிப்பொழிவு நகரை தாக்கி இருந்தது. இதனால் மொன்றியல் மற்றும் லவாளில் சுமார் 70 சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இந்த பனிப்பொழிவினை அகற்றுவதற்கு சுமார் எட்டு நாட்கள் வரையில் தேவைப்படும் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த பனிப்பொழிவு காரணமாக வீதி போக்குவரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பனிப் பொழிவுகள் ஏற்பட்டால் இந்த நடவடிக்கை மேலும் காலதாமதம் ஆகலாம் என தெரிவிக்கப்படுகிற அதேவேளை

வாகனங்கள் மீதும் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுவதாகவும் இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறுகிய வீதிகளைக் கொண்ட பெருநகரங்களில் வார இறுதியில் நகராட்ச்சி ஒரு “சிறப்பு நடவடிக்கையை” மேற்கொண்டதாகவும், நகராட்ச்சியின் எல்லைகளுக்கு உட்பட்ட 1,000 கிலோமீட்டர் தூரம் வரை பனி அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

20 சென்டிமீட்டர் பனியை அகற்றுவதற்கு வழக்கமாக நான்கு நாட்கள் ஆகும் என்றும், ஒரு நாளைக்கு 25 சதவீதம் பனி அகற்றப்படும் என்றும் சபோரின் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பனியின் அளவு காரணமாக, ஒரே பகுதியில் ஒரு முறைக்கு பதிலாக இரண்டு முதல் மூன்று முறை பனிப்பொழிவு இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பனி பொழிவை அகற்றுவதற்கான தாமதத்திற்கு மற்றுமொரு காரணம், நகராட்சியின் நடவடிக்கையின் போது அகற்ற வேண்டிய கார்களின் எண்ணிக்கை அதிகம் என்று சபோரின் தெரிவித்துள்ளார் .

“ஒவ்வொரு முறையும் நாம் ஒரு காரை இழுக்கும்போது, சுமார் ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை இழக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

நகரம் முழுவதும் பனி அகற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த “நோ பார்க்கிங்” அறிகுறிகளுக்குக் கீழ்ப்படியுமாறு சபோரின் மொன்றியல் மக்களை வலியுறுத்தினார்.

முந்தைய செய்தி எதிர்வரும் தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன் – பெஸ்கல்
அடுத்த செய்தி நீதிமன்ற வளாகத்திற்குள் ‘கணேமுல்ல சஞ்சீவ’ சுட்டுக்கொலை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டக் ஃபோர்ட் அரசாங்கத்தால் ‘பில் 5’ (Bill 5) சட்டம் நிறைவேற்றம்

ஜூன் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

முடிவுக்கு வந்ததது ஒன்டாரியோவின் அரசு கல்லூரி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்!

நவம்பர் 5, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசாங்கத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ள மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பு

நவம்பர் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

ஸ்கார்பரோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் 19 வயது இளைஞர் காயம்

மே 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?