தென்மேற்கு சஸ்காட்செவன் பகுதியில், கனடாவின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை (Environment and Climate Change Canada – ECCC) பல சூறாவளி எச்சரிக்கைகளை விடுத்தது.
பலத்த காற்று, அதிக மழை, மற்றும் பெரிய ஆலங்கட்டி மழை ஆகியவற்றுடன் கூடிய ஆபத்தான வானிலை நிலைமைகள் குறித்து குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சூறாவளிகள் தரையில் நிலைகொண்டுள்ளமை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், புயல் குறித்த தகவல் சேகரிப்பாளர்கள் (storm chasers) மற்றும் உள்ளூர் மக்களிடமிருந்து பல தகவல்கள் வந்துள்ளன.
முதல் சூறாவளி எச்சரிக்கை பிற்பகல் 4:20 மணிக்கு வெளியிடப்பட்டது.
ஸ்டாஃப்டன் (Stoughton), ஆர்கோலா (Arcola), லாம்பமேன் (Lampman), பியன்ஃபைட் (Bienfait), நோர்த் போர்டல் (North Portal), ஆலமேடா (Alameda) மற்றும் ஒக்ஸ்போ (Oxbow) போன்ற பகுதிகள் இந்த சூறாவளி எச்சரிக்கை வலயத்துக்குள் உள்ளடங்கும்.
இதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு சற்று முன்பு, அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
அடுத்த 30 நிமிடங்களில், மேலும் மூன்று சூறாவளி எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன.
இதனால், சஸ்காட்செவன் மாகாணத்தின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட சமூகங்கள் எச்சரிக்கைப் பகுதிக்குள் கொண்டுவரப்பட்டன.
இந்த திடீர் சூறாவளி எச்சரிக்கைகள் சஸ்காட்செவன் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

