ஒட்டாவாவின் தெற்குப் பகுதியில் உள்ள மனோட்டிக் (Manotick) கிராமப்புறத்தில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர் 19 வயதுடைய மஜேத் அல்-அர் (Majed Al-Ar) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தத் கொலை தொடர்பாக 22 வயதுடைய உசேன் கடூரா (Hussein Kaddoura) என்பவர் மீது கொலை மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒட்டாவா காவல்துறையினர் சுமத்தியுள்ளனர்.
நேற்று முன் தினம் மாலை 4:30 மணியளவில், ஒட்டாவாவின் தெற்குப் பகுதியில் உள்ள பேங்க்ஃபீல்ட் சாலை மற்றும் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் டிரைவ் சந்திப்பிற்கு அருகில் இந்தத் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவரை மீட்புக் குழுவினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மஜேத் அல்-அர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
மற்றொரு நபர் லேசான காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக முதலில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபரான உசேன் கடூரா மீது கொலை (Manslaughter), கடத்தல் (Kidnapping) மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
