இக்கலந்துரையாடலில் மாகாணங்களுக்கு இடையேயான வர்த்தகம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் மற்றும் ஒன்ராறியோ பிரதமர் டக் ஃபோர்டின் அலுவலகம் இவ் விடயங்களை உறுதிப்படுத்தியுள்ளன .
கூட்டாட்சி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கலந்துரையாடல் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மார்க்க கார்னி தனது ஆரம்ப உரையில், இன்றைய நிகழ்ச்சி நிரல் “முதலீட்டை ஊக்குவித்தல், கனேடிய தொழிலாளர்கள் இந்த நாட்டில் எங்கும் அவர்கள் விரும்பியபடி வேலை செய்ய முடியும் என்பதை உறுதி செய்தல்” மற்றும் நாடு முழுவதும் பொருட்கள் நகர்த்துவது தொடர்பாக இருக்கும் என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
“நாம் முன்பு கற்பனை செய்து பார்க்காத விஷயங்களை, நாம் இதற்கு முன்பு நகராத வேகத்தில் செய்ய வேண்டும்,” எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்
மேலும் “அதன் ஒரு அம்சம் என்னவென்றால், நமக்கு கட்டுமானத் தொழிலாளர்கள் தேவை, மேலும் இது முன்னதாக மூலதன ஆதாயங்களின் அளவை மீண்டும் கொண்டு வந்ததன் ஒரு பகுதியாகும், இதனால் அந்த அபாயங்களை எடுப்பவர்கள் வெகுமதிகளைப் பெறுவார்கள்.” எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.