வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில் கியூபெக்கின் வடக்கு கடற்கரையில் உள்ள நடாஷ்குவான் என்ற சமூகத்திற்கு அருகில் ஏர்மெடிக் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
விமான ஆம்புலன்ஸ் மருத்துவ உதவிக்காக அனுப்பப்பட்டு, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏரியில் மோதியதாக கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் (TSB) செய்தித் தொடர்பாளர் நிக் டெஃபால்கோ தெரிவித்தார்.
நான்கு பணியாளர்கள் மற்றும் ஒரு பயணி விமானத்தில் இருந்ததாக மருத்துவ விமான போக்குவரத்தில் நிபுணத்துவம் பெற்ற ஏர்மெடிக்கின் செய்தித் தொடர்பாளர் ரஃபேல் போர்கோல்ட் தெரிவித்தார்.
மாகாண காவல்துறையான சுரேட்டே டு கியூபெக்(Surete du Québec) (SQ) தெரிவிக்கையில் , ஒருவர் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட்டுள்ளதாகவும் ,காணாமல் போன நான்கு நபர்களைக் கண்டுபிடிக்க தரை மற்றும் நீர்வாழ் தேடல் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன.எனவும் தெரிவித்துள்ளது.
“நிலைமையை நிர்வகிக்கவும் உதவி வழங்கவும் விமான மருத்துவ பணியாளர்கள் அதிகாரிகள் மற்றும் முதல் பதிலளிப்பவர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர்” என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து SQ மற்றும் TSB விசாரணை நடத்தி வருகின்றன.
கியூபெக் நகரத்திலிருந்து வடகிழக்கே சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் நடாஷ்குவான் அமைந்துள்ளது.
