இஸ்ரேலிற்கு ஆதரவாக ஈரானில் மூன்று இடங்களில் அமைந்திருக்கும் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க விமானப்படை தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்காவும் போரில் இறங்கப்போவதாக செய்திகள் ஏற்கனவே வெளியாகின. இதுதொடர்பாக ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் முடிவெடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அமெரிக்கா ஈரானைத் தாக்கியுள்ளது மத்தியக் கிழக்கில் மிகப்பெரிய மோதலுக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்..
ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் என மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை ‘மிகவும் வெற்றிகரமானது’ எனக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அமைதி பாதைக்கு திரும்பாவிட்டால் மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பேசிய ட்ரம்ப், ஈரானை மத்திய கிழக்கின் கொடுமைக்காரன் எனக் குறிப்பிட்டுள்ளார்.