Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

காலவரம்பு மீறினால் இலவச பாஸ்போர்ட் – கனடா அரசின் புதிய உத்தரவாதம்!

மார்ச் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் கூட்டாட்சி அரசு, பாஸ்போர்ட் சேவையில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. 2026 ஏப்ரல் 1 முதல், முழுமையான பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் 30 வேலை நாட்களுக்குள் செயலாக்கப்பட வேண்டும் என புதிய சேவை தரநிலை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த காலக்கெடுவுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படாவிட்டால், விண்ணப்பதாரர்களுக்கு அது முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். அதாவது, அவர்கள் செலுத்திய கட்டணம் முழுமையாகத் திருப்பி வழங்கப்படும்.

புதிய விதிகளின்படி, சேவை கனடா மையங்களில் தேவையான அனைத்து ஆவணங்களுடனும் நேரடியாக விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவாதம் பொருந்தும். அஞ்சல் மூலமாக அல்லது கனடா போஸ்ட் மையங்கள் வழியாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் இதில் சேர்க்கப்படாது.

குடிமக்கள் சேவைகள் அமைச்சர் தெரிவித்ததாவது:
“பயணம், வேலை, குடும்ப இணைவு போன்றவற்றிற்கு பாஸ்போர்ட் மிகவும் அவசியமானது. அதனை காலத்திற்கு உட்பட வழங்க முடியாவிட்டால், அந்தச் செலவை மக்களிடம் இருந்து பெறுவது நியாயமல்ல” என்று கூறினார்.

மேலும், பணத்தைத் திரும்பப் பெற தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை. 30 வேலை நாட்களை மீறியவுடன், கட்டணம் தானாகவே முன்பு செலுத்திய முறையில் திருப்பி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், விண்ணப்பம் முழுமையாக ஏற்கப்பட்ட பின்னரே 30 நாள் கணக்கெடுப்பு தொடங்கும். கையொப்பம் இல்லாமை, தவறான தகவல்கள் அல்லது புகைப்படப் பிழைகள் இருந்தால், அவை சரிசெய்யப்படும் வரை காலவரம்பு நிறுத்தப்படும்.

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பாஸ்போர்ட் தாமதங்களால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியை சரிசெய்யும் முயற்சியாக இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படுகின்றது.

இந்த புதிய தரநிலை 2026ஆம் ஆண்டின் பயண உச்சகட்டத்தை முன்னிட்டு சேவை கனடா தங்களின் பணியாளர்களை அதிகரித்து, செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான காலத்தை வழங்கும் வகையில், ஒரு ஆண்டிற்குள் அமுலுக்கு வரும்.

முந்தைய செய்தி பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்
அடுத்த செய்தி வீதியிலுள்ளோருக்கு 120 மில்லியன் உதவி – மனிதநேய நோக்கில் கியூபெக் அரசு”

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

காசநோய் பாதிப்பு நிலைமையைச் சமாளிக்க கனடியச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் அவசரகால ஒப்பந்தம் கையெழுத்தானது

பிப்ரவரி 18, 2026
கனடாமுதன்மை செய்தி

தேசிய நினைவகத்தை திறந்த கனடாவின் சீர்திருத்த சேவை

நவம்பர் 8, 2025
கனடாமுதன்மை செய்தி

காரணத்தை கூற மறுக்கும் கனடா வருவாய் முகவரகம்

அக்டோபர் 3, 2025
கியூபெக்முதன்மை செய்தி

லவால் ஸ்டார்பக்ஸ் கடையில் திடீர் துப்பாக்கிச் சூடு

அக்டோபர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?