மனிடோபா மாகாண கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக ஃபோர்ட் வைட் சட்டமன்ற உறுப்பினர் ஓபி கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் வாலி டௌட்ரிச்சை அவர் தோற்கடித்தார்.
தபால் மூலம் நடைபெற்ற வாக்கெடுப்பில், கான் 50.4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம் அவர் 2,198.8 புள்ளிகளைப் பெற்றார்.
இந்தத் தேர்தல் முடிவுகளை கட்சியின் தலைவர் தேர்தல் குழுவின் தலைவர் பிராட் சாண்டர் வின்னிபெக் நகரில் அறிவித்தார்.
2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிடோபா மாகாணத் தேர்தலில் என்டிபி கட்சியிடம் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்தது.
அதனைத் தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை ஹீதர் ஸ்டெஃபன்சன் ராஜினாமா செய்தமை காரணமாகவே, இந்தத் தலைவர் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.