சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்று ரஷ்யாவில் இன்று அதிகாலை பதிவாகியது. ரஷ்யா மற்றும் ஜப்பானிலும் சுனாமி அலைகள் 12 அடி உயரத்திற்கு எழுந்தன . பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி ஏற்பட்டது.
மின் கட்டமைப்புகள் செயல் இழந்துள்ளதாகவும்.தொலைபேசி சேவைகளை இணையம் என்பன பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.
இதன் போது உயிர்சேதங்கள் ஏற்பட்டதாக இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை அமெரிக்காவின் அலாஸ்கா, ஹவாய் ஆகிய பகுதிகளிலும் நியூசிலாந்திலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கும் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள வாஷிங்டன் கலிஃபோர்னியா மாகாணங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tsunami waves hitting Japan.
Pray for them. 🙏
— AmericanPapaBear (@AmericaPapaBear) July 30, 2025