கனேடியப் பொதுத்தேர்தலில் இளைஞர்கள் அதிகமாக வாக்களிக்க வேண்டும் என, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே வலியுறுத்தியுள்ளார்.
லிபரல் கட்சி கனடாவின் வயதான வாக்காளர்களைக் கவர்ந்து வரும் நிலை காணப்படுகிறது.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் லிபரல் கட்சி முன்னணியில் இருந்தாலும், இளைஞர்கள் அதிகளவில் வாக்களித்தால், பழமைவாத கட்சியால் வெற்றி பெற முடியும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கடந்த தேர்தல் வரலாற்றில், இளைஞர்கள், குறிப்பாக ஆண்கள், குறைந்த அளவிலேயே வாக்களித்துள்ளனர்.
ஆனால், அவர்களே பொய்லிவ்ரேவின் பழமைவாத கட்சிக்கு ஆதரவாக உள்ளனர் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த இளைஞர்களை அதிகளவில் வாக்களிக்க வைத்தால், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வெற்றிக்கான சாத்தியம் அதிகரிக்கும் எனக் கருதப்படுகின்றது.
இந்நிலையிலேயே, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே, பொதுத்தேர்தலில், அதிகளவில் இளைஞர்களின் பங்கேற்பைக் கோரியுள்ளார்.