Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள பாதிரியார்

ஆகஸ்ட் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் ஏற்கனவே தண்டனை பெற்ற மொன்றியலைச் சேர்ந்த முன்னாள் பாதிரியார் ஒருவர், சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கியூபெக் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, 71 வயதான முன்னாள் கத்தோலிக்க பாதிரியாரான பிரையன் பௌச்சர் (Brian Boucher) இந்த புதிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

மொன்றியல் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்தே இவர் மீது இந்த புதிய வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அவர் மீது சிறுவர் ஆபாசப் பொருட்களை அணுகியமை, அவற்றை வைத்திருந்தமை மற்றும் அவற்றை விநியோகித்தமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, 2019 ஆம் ஆண்டு இரு சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக பௌச்சருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1990 முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், பாதிரியாராகப் பணியாற்றியபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் மீது இக்கொடூரச் செயலை அவர் புரிந்ததாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அவருக்குப் பின்னர் நிபந்தனை பிணை வழங்கப்பட்டது.

எனினும், அவர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் அண்மையில் வெளிவந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரது இருப்பிடத்தைச் சோதனையிட்டு பல மின்னணு சாதனங்களைக் கைப்பற்றினர்.

அச்சாதனங்களைப் பரிசோதித்தபோதே சிறுவர் ஆபாசப் படங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கியூபெக் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பௌச்சர், தற்போதைக்குக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நயாகரா ஃபால்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது
அடுத்த செய்தி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 11ஆம் திருவிழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மிராபெல் நெடுஞ்சாலை விபத்து: கனரக லொரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

ஜூலை 6, 2026
கியூபெக்

கனடாவிலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளார் பேராசிரியர் காட் சாத்

மே 19, 2026
கியூபெக்

கியூபெக்கில் மீண்டும் வெடித்தது மதச்சார்பின்மை விவாதம்.

மார்ச் 14, 2026
கியூபெக்முதன்மை செய்தி

நிக்கோலஸ் மதுரோவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மொன்றியலில் ஆர்ப்பாட்டம்

ஜனவரி 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?