சென் லோரன்ஸ் நதியில் தவறி விழுந்து காணாமல்போன மொன்றியல்வாசியைத் தேடும் கள நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாகக் கியூபெக் மாகாணப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மொன்றியல் நகரைச் சேர்ந்த பெபிட்டோ ஜூனியர் லபடோர் (Pepito Jr Labador) என்ற 45 வயது நபரே திகதி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.
அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக ஆறு நாட்களாகத் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன.
தொடர்ச்சியான தேடுதல் பணிகளின் பின்னரே, கியூபெக் மாகாணப் பொலிஸார், தேடுதல் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தும் முடிவை மேற்கொண்டுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டாலும், இது குறித்த புலனாய்வு விசாரணைகள் தொடரும் என்று கியூபெக் மாகாணப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதிய தகவல்கள் அல்லது சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில், நிலைமைக்கு ஏற்ப பொருத்தமான வளங்களைப் பயன்படுத்தித் தேடுதல் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் பொலிஸார் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

