மொன்ட்ரியலின் புறநகர் ரயில் மற்றும் பேருந்து சேவைகளை வழங்கும் ‘எக்சோ’ (Exo) போக்குவரத்து நிறுவனம், கடும் நிதி நெருக்கடி காரணமாகத் தனது ஊழியர் எண்ணிக்கையில் 11 சதவீதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் 73 பணியிடங்கள் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன.
கியூபெக் மாகாண அரசு விதித்துள்ள கடும் நிதிக் கட்டுப்பாடுகளே இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பெரும்பாலும் முகாமைத்துவம் (Management) மற்றும் வாடிக்கையாளர் சேவை (Customer Service) துறைகளில் உள்ள ஊழியர்களே இந்தப் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட உள்ளனர்.
2026-ஆம் ஆண்டுக்கான ரயில் மற்றும் பேருந்து ஓடும் நேரங்களில் இப்போதைக்கு மாற்றமில்லை என்றாலும், எதிர்காலத்தில் பல வழித்தடங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது பயண நேரங்கள் குறைக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.
