மொன்றியல் நகரில் சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாள் முழுவதும் ஸ்தம்பித்திருந்த ‘ரெசோ எக்ஸ்பிரஸ் மெட்ரோபொலிட்டன்’ (Réseau express métropolitain – REM) இலகு இரயில் சேவை தற்போது முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது.
மொன்றியலின் முக்கிய பொதுப்போக்குவரத்து கட்டமைப்பான REM இலகு இரயில் சேவையின் சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ‘கனோரா’ (Canora) மற்றும் ‘கோட்-டி-லீஸ்’ (Côte-de-Liesse) ஆகிய நிலையங்களுக்கு இடையிலான போக்குவரத்து இரு திசைகளிலும் முழுமையாக நிறுத்தப்பட்டது.
இந்தச் சேவைத் தடங்கல், சுமார் 7 மணித்தியாலங்கள் நீடித்ததை அடுத்து மதியப் பொழுதிலேயே இரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு நிலைமை வழமைக்குக் கொண்டுவரப்பட்டது.
இரயில் பாதையின் சிக்னல் உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினையே இதற்குக் காரணமென, REM இன் இயக்க நிறுவனமான ‘பல்சர்’ (Pulsar) அமைப்பின் ஊடகப் பேச்சாளர் மெக்சிம் லலிபெர்டே (Maxime Laliberté) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

