Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொண்ட்ரியலில் வயோதிபர்களை துன்புறுத்திய நபருக்கு சிறைத்தண்டனை விதிப்பு

ஜூன் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் (Montreal) நகரில் உள்ள தனியார் முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றில், தங்கியிருந்த வயோதிபர்களை துன்புறுத்தி, அவர்களுக்கு தவறான மருந்துகளை வழங்கிய, பராமரிப்பு இல்ல உரிமையாளருக்குக் கனேடிய நீதிமன்றம் வீட்டுச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

மொண்ட்ரியலின் பீக்கன்ஸ்ஃபீல்ட் (Beaconsfield) பகுதியில் ரெசிடென்ஸ் ஆல்ப்ஸ் (Residence Alps) என்ற முதியோர் இல்லத்தை நடத்தி வந்த 67 வயதான பிரமீளா கூப்லால் (Pramela Kooblall) என்ற பெண் மீது, தனது பராமரிப்பில் இருந்த மூன்று முதியவர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளை வழங்கத் தவறியமை மற்றும் அவர்களின் மருத்துவ ஆவணங்களை போலியாகத் தயாரித்தமை முதலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சிறுநீர் மற்றும் மலக் கழிவுகளைக் கட்டுப்படுத்த முடியாத (Incontinent) முதியவர்கள், தங்களின் கழிவுகள் படிந்த டயப்பர்களுடனேயே (Couches souillées) பல நாட்கள் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.

முதியவர்களை எப்போதும் தூக்கக் கலக்கத்திலேயே வைத்திருப்பதற்காக, தூக்கத்தை வரவழைக்கும் குவாட்டியாபைன் (Quetiapine) என்ற சக்திவாய்ந்த மாத்திரையை ஒரு முதியவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த அளவை விட இருமடங்காக பிரமீளா வழங்கியுள்ளார்.

மேலும், அந்த மாத்திரை பரிந்துரைக்கப்படாத மற்றொரு முதியவளுக்கும் வலுக்கட்டாயமாக அதை ஊட்டியுள்ளார். நீதிமன்ற விசாரணையில், இந்தக் குற்றச்சாட்டுகளை பிரமீளா கூப்லால் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு சார்ந்த இறுதி விசாரணை மொண்ட்ரியல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இந்த இறுதி விசாரணையில், அரசு மற்றும் பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர்களின் கூட்டுப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நீதிபதி எரிக் பவுத்ரியர் (Éric Poudrier), குற்றவாளிக்கு வீட்டுச் சிறைத் தண்டனை (Prison à la maison) விதித்துத் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொண்ட்ரியல் வடக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கில் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் நால்வர் கைது

ஜூன் 2, 2026
கியூபெக்முதன்மை செய்தி

தேர்தல் சார் முடிவுகளை மாற்றிக்கொள்ளும் இளம் வாக்காளர்கள் அதிகம் உள்ள மாகாணமாக கியூபெக் உள்ளது!

ஏப்ரல் 16, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் யூதவழிபாட்டுத் தலம் மீது தீவைப்பு முயற்சி – சந்தேக நபர் கைது.

ஜூன் 5, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

உள்ளூர் பொருட்களை வாங்குமாறு கியூபெக் மாகாண அரசு பிரச்சாரம் மேற்கொள்கிறது!

ஏப்ரல் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?