Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொண்ட்ரியல் வடக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள்

ஜூன் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் – வடக்குப் பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மாபெரும் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மொண்ட்ரியல் நகரில் உள்ள கறுப்பின மற்றும் அரபு வம்சாவளி மக்களுக்கு எதிராக, சில பொலிஸ் அதிகாரிகள் திட்டமிட்ட இனவெறி மற்றும் வன்முறைத் தாக்குதல்களை நிகழ்த்தியதாக வெளிவந்த தகவலை அடுத்தே, இந்தப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மொண்ட்ரியல் – வடக்கு பிராந்தியத்தில் உள்ள Station 39 என்ற பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 16 பொலிஸ் அதிகாரிகளே, சிறுபான்மையின மக்களுக்கு எதிராக மிகக் கொடூரமான இனவெறிச் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனரெனத் தெரியவருகின்றது.

குறிப்பாக, கைது நடவடிக்கைகளின் போது கறுப்பின இளைஞர்களின் டிரெட்லாக்ஸ் (Dreadlocks/Locs) எனப்படும் அடர்ந்த தலைமுடிப் பகுதிகளை  வெட்டியுள்ள அந்த பொலிஸ் அதிகாரிகள், அவற்றை தங்களின் வெற்றிக்குறியீடுகளாக சட்டவிரோதமாகச் சேகரித்து வைத்துள்ளனர்.

இந்த விவகாரம், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மொண்ட்ரியல் பொலிஸ்படையின் தலைமை இயக்குனர் ஃபேடி டாக்ஹெர் (Fady Dagher) நடத்திய செய்தியாளர் சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது.

இந்த இனவெறிக் கொடுமையைக் கண்டித்து இன்று, ஹென்றி-பூரஸ்ஸா (Henri-Bourassa) வீதியில் உள்ள பொலிஸ் நிலையத்தின் முன்பாக, நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர்.

பொலிஸ் வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு (COBP) மற்றும் ஹூட்ஸ்டாக் (Hoodstock) போன்ற சமூக அமைப்புகளின் தலைமையில், அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஏறாவூரில் கொடூரமாக தாக்கப்பட்ட 16 வயது சிறுவன்
அடுத்த செய்தி மொண்ட்ரியலில் வயோதிபர்களை துன்புறுத்திய நபருக்கு சிறைத்தண்டனை விதிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தீர்மானம்

மார்ச் 17, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் காணாமல்போகும் நிலை அதிகரிப்பு.

ஜூன் 11, 2026
கியூபெக்

மொன்றியல் நகர பிரபல பள்ளி ஒன்றிற்கு வந்த தொலைபேசி மிரட்டல்

ஜூன் 3, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வாகனக் காப்பீட்டுச் சபை அறிமுகப்படுத்திய ‘SAAQclic’ இணையதளத் திட்டம் படுதோல்வி

பிப்ரவரி 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?