Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பழங்குடி மக்களின் மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் – ஆளுநர் மேரி சைமன்

மே 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் உத்தியோகபூர்வ மொழியான பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வதை விட, நாட்டின் பூர்வீகக் குடிகளான பழங்குடி மக்களின் (Indigenous) மொழிகளைப் பாதுகாத்து வளர்ப்பதற்கே தாம் முன்னுரிமை அளிப்பதாக, கனடாவின் ஆளுநர் நாயகம் (Governor General) மேரி சைமன் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாட்டின் புகழ்பெற்ற கொள்கை ஆய்வுக்கான நிறுவனமான ‘Institute for Research on Public Policy நடத்திய மாநாட்டில் உரையாற்றிய நாட்டின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளருமான லூயிஸ் ஆர்பர், ”கனடாவின் இருமொழிச் சட்டக் கட்டமைப்பில் (Bilingualism) பெரும் சீர்திருத்தம் தேவை” என வலியுறுத்தினார்.

நாட்டின் மிக உயரிய பதவிகளை வகிப்பவர்கள் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற பாரம்பரிய விதியைத் தளர்த்தி, பழங்குடி மொழிகளுக்கும் அதே அந்தஸ்தை வழங்க வேண்டும் என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி லூயிஸ் ஆர்பர் (Louise Arbour) ஒரு பரிந்துரையை முன்வைத்திருந்தார்.

அந்தப் பரிந்துரைக்கு ஆளுநர் நாயகம் மேரி சைமன் தமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாகப் பழங்குடி இனத்தைச் (Inuk) சேர்ந்த ஒருவராக ஆளுநர் நாயகம் பதவிக்கு 2021 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட மேரி சைமனுக்குப் பிரெஞ்சு மொழி சரளமாகப் பேச வராது என்ற குற்றச்சாட்டு, கியூபெக் உள்ளிட்ட பிரெஞ்சு மொழி பேசும் பிராந்தியங்களில் தொடர் விவாதங்களை ஏற்படுத்தி வந்த பின்னணியிலேயே, அவருடைய இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முந்தைய செய்தி பத்ரிசியா பெர்குசன் வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிய மொன்றியல் நீதிமன்றம்
அடுத்த செய்தி பழங்குடியினக் குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
கனடாமுதன்மை செய்தி

பதிலடி வரிகளால் பதில் சொல்ல தயாராகும் கனடா, மெக்சிக்கோ.

மார்ச் 6, 2025
கனடா

நான்கு ஆண்டுகளாக சட்டப் போராட்டத்தில் வெற்றிக் கண்ட கனடா சிவில் உரிமைக் கழகம் (CCLA)

ஜனவரி 17, 2026
கனடா

சிகிச்சை தாமதமானதால் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த 40 வயதான 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

தமது அமைச்சரவையை பிரதமர் மார்க் கார்னி வர்ணித்தார்

மே 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?