கனடாவின் நாடாளுமன்றம் மே 26ஆம் திகதி மீண்டும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றைய தினம் கனடாவின் பிரதமரும் லிபரல் கட்சியின் தலைவருமான மார்க் கார்னி நாடாளுமன்ற பொதுச்சபையின் உறுப்பினர் ஆகுவார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் கனடா தினத்திற்குள் மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தக தடைகளை குறைப்பது தொடர்பில் மக்களுக்கு அவர் அளித்த உறுதிமொழியை நிறைவேறியாக வேண்டிய இலக்கு மார்க் கார்னியின் முன்பு உள்ளது.
மேலும், கனடாவின் நடுத்தர வர்க்க மக்கள் மீதான வரிகளைக் குறைத்தல் தொடர்பாக அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் அவர் வசம் உள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜூன் மாதம் அல்பேட்டா மாகாணத்தில் ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டிலும் மார்க் கார்னியின் பங்கு பிரதானமாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன