கனேடியப் பிரதமர் மார்க் கார்னி “அடுத்த வாரத்திற்குள்” வெள்ளை மாளிகைக்கு வருவார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பொதுத்தேர்தலுக்கு முன்னதாக இடம்பெற்ற பிரசார காலத்தில், கனேடிய அரசியற் களத்தின் பிரதான வேட்பாளர்கள் இருவரும் தம்மை வெறுத்தனர் என்பதை தாம் அறிந்துள்ளதாக, ட்ரம்ப் கூறியுள்ளார்.
எனினும், மார்க் கார்னி ஒரு நல்ல மனிதர் என, அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இது தொடர்பில் கனடாவின் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல்களின்படி, இருநாடுகளின் தலைவர்களும் விரைவில் சந்திப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது தெரியவருகின்றது.
எனினும், இந்த சந்திப்புக்கான திகதி குறித்த எந்த தகவல்களையும் கனேடிய பிரதமர் அலுவலகம் வெளியிடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
