மொன்றியல் பிராந்தியத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு 23 வயதான இளம் தாய் பத்ரிசியா பெர்குசன் (Patricia Ferguson) மர்மமான முறையில் காணாமல் போன வழக்கில், மொன்றியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
72 வயதான செர்ஜ் ஆடெட் (Serge Audette) என்ற முதியவர் திட்டமிட்ட வகையில் குற்றச்செயல் மூலம் மரணத்தை ஏற்படுத்தியுள்ளார் என, நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் இதுவரை கண்டெடுக்கப்படாத நிலையிலும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதி டெனிஸ் காலியாட்சாடோஸ் (Dennis Galiatsatos) இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக இந்த விரிவான தீர்ப்பை வாசித்தார்.
குற்றவாளி செர்ஜ் ஆடெட் ஏற்கனவே ஒரு “ஆபத்தான குற்றவாளி” (Dangerous offender) எனப் பட்டியலிடப்பட்டவர் என்பதால், அவருக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனை பெற்றுத்தர அரசுத் தரப்பு வழக்கறிஞர் பியர்-ஒலிவியர் போல்டுக் (Pierre-Olivier Bolduc) தீவிரமாக முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
