மொன்றியலில் கடந்த 2021-ஆம் ஆண்டு மொன்றியலில் சட்டவிரோத வீதிப் பந்தயத்தில் (Street Racing) ஈடுபட்டு, ஒரு குடும்பத் தலைவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
28 வயதான நெடால் செட்கி (Nedal Sedqi) என்ற அந்த இளைஞருக்கான தீர்ப்பை மொன்றியல் நீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டர் டால்மாவ் நேற்று அறிவித்தார்.
ஹென்றி-பௌராசா (Henri-Bourassa) நெடுஞ்சாலையில், மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டிய சூழ்நிலையில், பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துள்ளனர்.
இதன் காரணமாக, 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த விபத்து சம்பவித்தது.
இவ்விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 55 வயது ரொபர்ட் டுூபோ (Robert Dubeau) உயிரிழந்தார்.
விபத்து நடந்தவுடன் அங்கு நின்று உதவி செய்வதற்குப் பதிலாக, விபத்தை ஏற்படுத்திய இளைஞரான செட்கி தனது வாகனத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் மொன்றியல் பொலிஸாரின் தீவிர விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் செட்கிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்குமாறு நீதிபதியைக் கோரினர்.
எனினும், செட்கிக்கு இதற்கு முன் குற்றப் பின்னணி இல்லாததைக் கருத்தில் கொண்டு நீதிபதி 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
