மொன்றியலின் மையப்பகுதியான வி்ல்லே-மேரி (Ville-Marie) பகுதியில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது வாழ்க்கைத் துணையாகக் கருதப்படும் நபர் ஒருவர் மொன்றியல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை பிற்பகல் 3:25 மணியளவில், சிம்சன் வீதியில் (Simpson Street) உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் பெண்ணின் நலம் குறித்து அறியுமாறு (Wellness check) மொன்றியல் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், அந்தப் பெண் உடலின் மேல் பகுதியில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டனர்.
மருத்துவ உதவியாளர்கள் அவருக்கு முதலுதவி அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
குறித்த பெண் உயிரிழந்த செய்தி வெளியான சில நேரத்திலேயே, மொன்றியல் விமான நிலையத்தில் ஒரு நபர் மாகாண பொலிஸாரிடம் சரணடைந்தார்.
தான் அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, அந்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் ஒரு குடும்ப வன்முறை (Conjugal Violence) தொடர்பாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
