மொண்ட்ரியலின் செயின்ட் – லாரன்ட் (Saint-Laurent) பகுதியில் உள்ள தனது சேவை மையம் நிரந்தரமாக மூடப்படுவதாக கியூபெக் வாகனக் காப்பீட்டுச் சபை அறிவித்துள்ளது.
இந்த மையத்தில் நடந்ததாகக் கூறப்படும் கடுமையான முறைகேடுகள் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவை மையத்தை ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்தது.
அங்கு நடக்கும் செயல்பாடுகள் குறித்து கடந்த மாதம் வந்த புகார்களைத் தொடர்ந்து, கியூபெக் வாகனக் காப்பீட்டுச் சபையின் விசாரணைப் பிரிவு, ஒரு ரகசிய ஆய்வை மேற்கொண்டது.
ஆய்வில் கண்டறியப்பட்ட முறைகேடுகள் மிகவும் தீவிரமானவை என்பதால், கியூபெக் வாகனக் காப்பீட்டுச் சபை, இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
வாகனச்சாரதி உரிமம் புதுப்பித்தல் மற்றும் வாகனப் பதிவு போன்ற பணிகளுக்கு தமது இணையதளத்தைப் பயன்படுத்துமாறு, கியூபெக் வாகனக் காப்பீட்டுச் சபை மொன்றியல் மக்களைக் கோரியுள்ளது.
