மொன்றியல் நகரில், அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து தள்ளப்பட்ட 31 வயதுப் பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம்மாதம் முதலாம் திகதி அன்று காலை 8:15 மணியளவில், மெர்சியர்-ஹோச்லாகா (Mercier–Hochelaga-Maisonneuve) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
சுமார் 3 மாடி உயரத்தில் இருந்து விழுந்த அந்தப் பெண், நடைபாதையில் மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் மொன்றியல் நகரில் இந்த ஆண்டின் முதல் கொலை (Homicide) எனப் பொலீசாரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 31 வயது நபருக்கு எதிராகக் கொலைக் குற்றச்சாட்டுகளைப் பதிவதற்கு, பொலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


