Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

ஒன்ராறியோ முதன்மை சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை விரிவுபடுத்த, 235 மில்லியன் டொலர்கள் – புதிய நிதி ஒதுக்கீடு!

ஜூன் 23, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோ மாகாணத்தில் முதன்மை சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்குடன், ஃபோர்ட்டின் அரசாங்கம் 235 மில்லியன்
டொலர்கள் புதிய நிதியை அறிவித்துள்ளது.

இந்த நிதி இந்த ஆண்டு மேலும் 300,000 ஒன்ராறியோ மக்களுக்கு முதன்மை சுகாதாரப் பராமரிப்பு வசதிகளைப் பெற்றுத்தர உதவும் என்று, மாகாண
சுகாதார அமைச்சர் சில்வியா ஜோன்ஸ் திங்கள்கிழமை அறிவித்துள்ளார். ஒன்ராறியோவில் தற்போது குடும்ப வைத்தியர் இல்லாதவர்களின்
எண்ணிக்கை 2.5 மில்லியனாக உள்ளதாகவும், இது 2026 ஆம் ஆண்டளவில் 4.4 மில்லியனைத் தாண்டும் என்றும் ஒன்ராறியோ மருத்துவ சங்கம் (Ontario
Medical Association) கவலை தெரிவித்திருந்தது.

இந்த அவசரத் தேவையைக் கருத்தில்கொண்டே புதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் விடுக்கப்பட்ட முன்மொழிவு அழைப்பின் (call for proposals) மூலம், முதன்மை சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் இல்லாத அதிக எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்களைக் கொண்ட சமூகங்களுக்கு
முன்னுரிமை அளித்து 130 முதன்மை பராமரிப்புக் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்கள் அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்களுக்குள் நோயாளிகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கும் என்று ஒன்ராறியோவின் முதன்மைப் பராமரிப்பு நடவடிக்கை குழுவின் (Primary Care Action team) தலைவர் கலாநிதி. ஜேன் ஃபில்போட் (Dr. Jane Philpott) தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நிதி, "முதன்மைப் பராமரிப்பு செயல் திட்டம் (Primary Care Action Plan) என்ற அரசின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இத்திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டிற்குள் ஒன்ராறியோவில் உள்ள ஒவ்வொருவரையும் பொது நிதியுதவி பெறும் குடும்ப வைத்தியர் அல்லது
முதன்மைப் பராமரிப்புக் குழுவுடன் இணைப்பதே இலக்கு என்று அமைச்சர் சில்வியா ஜோன்ஸ் கூறியுள்ளார்.

இந்த நிதியில் 142 மில்லியன் டொலர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படும் நிதி ஒதுக்கீடாக சுகாதாரப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு
செய்வதற்கும், தக்கவைத்துக் கொள்வதற்கும் பயன்படுத்தப்படும். இதில் வைத்தியர்கள் அல்லாத குழு உறுப்பினர்களான தாதியர்கள்,  பதிவுசெய்யப்பட்ட நடைமுறைத் தாதியர்கள், வைத்தியர் உதவியாளர்கள், மருந்தாளுநர்கள் போன்றோருக்கான நிதியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு மூலோபாய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் பிரதமர் மார்க் கார்னி, கையெழுத்திட்டுள்ளார்.
அடுத்த செய்தி ஈரான் 19 குறுகிய தூர மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை அல் உதெய்ட் விமான தளத்தை நோக்கி ஏவியது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள்!

மார்ச் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஊழல் குற்றச்சாட்டில் கைதான ஓ.ஐ.சி

டிசம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இந்தியாவிற்கு சொந்தமான ரோந்து கப்பல் தெற்கு கடல் பகுதிக்கு மாற்றம்

நவம்பர் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

பியூவல் (Beauval) கிராமத்திற்குள் நுழைந்த காட்டுத்தீ

ஜூலை 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?