போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கோடு பல்வேறு இடங்களில் சோதனை நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் 29 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 42 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
திக்வெல்ல, ஊருகமுவ பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
இந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 400 மில்லியன் ரூபாய் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.