Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் ‘டிஜிட்டல் சுகாதாரப் பதிவு’ திட்டம்!

மே 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் சுகாதாரத் துறையை நவீனப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக, டிஜிட்டல் சுகாதாரப் பதிவு திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மொன்றியல் மற்றும் மோரிசி (Mauricie) ஆகிய இரு பிராந்தியங்களில் இந்த முன்னோடித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் மருத்துவ விபரங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், நோயாளிகள் ஒவ்வொரு முறை மருத்துவமனைக்குச் செல்லும்போதும் தங்களது முந்தைய மருத்துவக் குறிப்புகளை மீண்டும் மீண்டும் கூற வேண்டிய அவசியம் இருக்காது.

இரத்தப் பரிசோதனை முடிவுகள், எக்ஸ்ரே அறிக்கைகள் மற்றும் மருந்துச் சீட்டுகள் என அனைத்தும் ஒரே மின்னணு கோப்பில் சேமிக்கப்படும்வசதியை இத்திட்டம் ஏற்படுத்துகின்றது.

இதன்மூலம் மருத்துவர்கள் மிக விரைவாகவும் துல்லியமாகவும் சிகிச்சை அளிப்பதற்கு இந்தத்திட்டம் உதவும் என்று கூறப்படுகின்றது. இந்தத் திட்டத்திற்காக ஆரம்பத்தில் 1.5 பில்லியன் டொலர்கள் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனினும், தற்போது அதன் மொத்தச் செலவு 2.5 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. இதற்காக எபிக் (Epic) எனும் உலகத்தரம் வாய்ந்த நவீன மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 120 மில்லியன் டொலர் வரையான நிதியை கியூபெக் அரசு சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, புதிய டிஜிட்டல் முறையை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பழகிக்கொள்வதற்காக, மொன்றியல் மற்றும் மோரிசி (Mauricie) முதலான இரு பிராந்தியங்களிலும் அவசரமற்ற மருத்துவச் சேவைகள் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்துவரும் இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்குள், கியூபெக் மாகாணம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர் மீதான குற்றச்சாட்டு சட்டவலுவற்றது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

ஏப்ரல் 30, 2026
கியூபெக்

கியூபெக் சுதந்திரம் குறித்த வாக்கெடுப்புக்கான வாய்ப்புகள் அதிகரிப்பு

டிசம்பர் 6, 2025
கியூபெக்முதன்மை செய்தி

10 வயது சிறுவன் மீது கொதி நீரை ஊற்றிய நபருக்கு 27 மாத சிறை தண்டனை

ஜனவரி 29, 2026
கியூபெக்முதன்மை செய்தி

செயின்ட் லொரன்ஸ் ஆற்றின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கடும் புயல் தாக்கம்

ஏப்ரல் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?