கியூபெக் மாகாண மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைவர் தமாரா தெர்மிட்டஸ் (Tamara Thermitus) மீதான குற்றச்சாட்டுகளைக் கொண்டமைந்த, 2018-ஆம் ஆண்டு ஓம்புட்ஸ்மேன் (Ombudsperson) அறிக்கை சட்டவலுவற்றது என கியூபெக் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2017-ஆம் ஆண்டு கியூபெக் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் கறுப்பினப் பெண் தமாரா தெர்மிட்டஸ் ஆவார். அவர் பதவியேற்ற சில காலத்திலேயே, நிர்வாகச் சீர்கேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஓம்புட்ஸ்மேன் அமைப்பால் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த சர்ச்சைக்குரிய அறிக்கையினால் தமாரா 2018-ஆம் ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லூகாஸ் கிரானோசிக் (Justice Lukasz Granosik), ஓம்புட்ஸ்மேன் அறிக்கை நியாயமற்றது மற்றும் குறைபாடுகள் உடையது எனத் தீர்ப்பளித்தார்.
தமாரா தனது தரப்பு விளக்கத்தைக் கூறுவதற்கு முன்பே, அந்த அறிக்கை மாகாண நீதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப் பட்டமையானது, நீதிக்கு எதிரானது என நீதிபதி சுட்டிக்காட்டினார் தமாராவுக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்களின் கூற்றுகள் முரணாக இருந்த போதிலும், ஓம்புட்ஸ்மேன் அவற்றை ஏன் நம்பினார் என்பதற்குப் போதுமான காரணங்கள் இல்லை என்பதையும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் ஓம்புட்ஸ்மேன் அமைப்பு தனது அதிகார வரம்பையும், முறையான விசாரணை விதிகளையும் மீறியுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த தமாரா தெர்மிட்டஸ்,இது நீதிக்கான பயணத்தின் முதல் படிஎன்று கூறினார்.
இருப்பினும், கடந்த 9 ஆண்டுகளாகத் தான் அனுபவித்த மன உளைச்சலும், இழந்த கௌரவமும், முடக்கப்பட்ட தனது தொழில் வாழ்க்கையும் மீண்டும் கிடைக்காது என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
