Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

என்.டி.பி (NDB) வங்கியில் நிதி முறைகேடு – சர்வதேச டெலாய்ட் நிறுவனம் ஊடாகத் தடயவியல் கணக்காய்வு

ஏப்ரல் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையின் என்.டி.பி (NDB) வங்கியில் இடம்பெற்ற சுமார் 1,320 கோடி இலங்கை ரூபாய் நிதி மோசடி தொடர்பாக, ஒரு விசேட தடயவியல் கணக்காய்வை (Forensic Audit) நடத்த அந்த வங்கி தீர்மானித்துள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘டெலாய்ட்’ (Deloitte) நிறுவனம் ஊடாக இந்த விசேட தடயவியல் கணக்காய்வை (Forensic Audit) நடத்த என்.டி.பி (NDB) வங்கி தீர்மானித்துள்ளது.

வங்கியின் உள்ளகச் செயல்பாடுகளில் இடம்பெற்ற இந்த பாரிய முறைகேடு குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியிருந்தது.
இதனடிப்படையில், ‘டெலாய்ட் இந்தியா’ நிறுவனத்தின் நிபுணர்கள் இந்தக் கணக்காய்வை மேற்கொள்வார்கள் என கொழும்பு பங்குச் சந்தைக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக சுமார் 2,600 கொடுக்கல் வாங்கல்கள் மூலம் இந்தத் தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. என்.டி.பி (NDB) வங்கியின் சில ஊழியர்கள் வெளிநபர்களுடன் இணைந்து இச்சதித்திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.

முன்னெடுக்கப்படவுள்ள இந்த தடயவியல் கணக்காய்வு விசாரணையின் மூலம் வங்கியின் கட்டுப்பாட்டு அமைப்புகளில் இருந்த ஓட்டைகள், நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் கண்காணிப்புத் தவறுகள் ஆகியவை விரிவாக ஆராயப்படவுள்ளன.

இந்தக் கணக்காய்வின் முடிவுகள் மற்றும் இடைக்கால அறிக்கைகள் நேரடியாக இலங்கை மத்திய வங்கியின் வங்கி மேற்பார்வைப் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.இதேவேளை, இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஏற்கனவே இந்த விவகாரத்தில் பலரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி சம்பா அரிசிகளின் விலைகள் குறைப்பு
அடுத்த செய்தி கடற்படையிலிருந்து ஓய்வுபெறும் வீரர்களுக்கு விசேட வேலைத்திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மண்டைதீவில் பணம் நகைகள் திருட்டு – சந்தேகநபர் கைது…

மே 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மார்ச் 24, 2026
இலங்கை

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

ஆகஸ்ட் 19, 2025
இலங்கை

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

நவம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?