எதிர்வரும் மாதம் பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சக பணிப்பாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில் சீனா ஏனைய நாடுகளுடன் தமது மூலோபாய உறவுகளை புதுப்பித்துக்கொள்ளும். நாம் ஏற்கனவே சீனாவுடன் நல்ல உறவைப் பேணுவதால் அவர்களுக்கு அழைப்புகள் நீட்டிருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
