Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் – ட்ரூடோ விமான நிலையத்தில் சொகுசு கார்களைத் திருடிய இளைஞர்

ஏப்ரல் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல்-ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் தொடர்ச்சியாகச் சொகுசு கார்களைத் திருடி வந்த கும்பலைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு, மொன்றியல் நீதிமன்றம் 40 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

மொன்றியலின் கோட்-டெ-நேஜ் (Côte-des-Neiges – CDN) பகுதியைச் சேர்ந்த இவர், ஒரு பாரிய குற்றச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்த இளைஞர் மற்றும் அவரது குழுவினர், விமான நிலையத்தின் நீண்டகால வாகன தரிப்பிடங்களில் (Long-term parking) நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விலையுயர்ந்த கார்களையே இலக்கு வைத்துள்ளனர்.

இவர்கள் சாவியில்லாமல் இயங்கும் கார்களின் சிக்னல்களைக் கையாளும் நவீன கருவிகளைப் (Signal Jammers) பயன்படுத்தி, சில வினாடிகளிலேயே கார்களைத் திருடி வந்துள்ளனர். திருடப்பட்ட கார்கள் உடனடியாக மொன்றியல் துறைமுகம் ஊடாக மேற்குஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கப்பல் மூலம் கடத்தப்பட்டுள்ளன. 2024-ஆம் ஆண்டு இறுதியில் புராஜெக்ட் O-X (Project O-X) என்ற பெயரில் மொன்றியல் பொலிஸார் நடத்திய பாரிய தேடுதல் வேட்டையில் இந்த இளைஞர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சோதனையின் போது, சுமார் 2.3 மில்லியன் டொலர் மதிப்புள்ள 19 சொகுசு கார்களைப் பொலிஸார் மீட்டிருந்தனர். திருடப்பட வேண்டிய கார்களை அடையாளம் காண்பது மற்றும் அவற்றை இரகசியக் கிடங்குகளுக்கு ஓட்டிச் செல்வது ஆகியவையே இந்த இளைஞரின் முக்கிய பணியாக இருந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறி 40 மாதச் சிறைத் தண்டனையை வழங்கினார்.

இவ்வாறான திருட்டுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, தற்போது மொன்றியல்-ட்ரூடோ விமான நிலையத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, நவீன கண்காணிப்பு கமராக்களும்
பொருத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள், விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்தும் போது ஸ்டீயரிங் லாக் (Steering wheel locks) மற்றும் ஜூபிஎஸ் (GPS trackers) கருவிகளைப் பயன்படுத்துமாறு, மொன்றியல் பொலிஸார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி மொன்றியலில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது
அடுத்த செய்தி சீனப் பயணத்தை நிறைவு செய்த நிதியமைச்சர் பிரான்சுவா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியலில் திரண்ட நூற்றுக்கணக்கான பெண்கள்

மார்ச் 9, 2026
கியூபெக்

மொன்றியலில் மீண்டும் மழையுடனான குளிரான வானிலை ஆரம்பம்

ஏப்ரல் 28, 2026
கியூபெக்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது

பிப்ரவரி 2, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் முக்கியத் திட்டங்களை செயல்முறைபடுத்த நடவடிக்கை முன்னெடுப்பு!

டிசம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?