இந்த ஆண்டின் முதலாவது பாரிய பனிப்புயல் ஆனது, கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளில் 35 சென்டிமீட்டர் வரை கனமான, ஈரமான பனியைப் பொழிந்துள்ளது.
மொன்ட்ரியால் பெருநகரப்பகுதி உட்பட கியூபெக் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான வீடுகளில் நேற்றைய தினம் முழு நாளும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மின்சாரத் துண்டிப்பு மற்றும் கடினமான பயண நிலைமைகள் காரணமாக, கியூபெக் மாகாணத்தின் பல பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டன.
மொன்ட்ரியல் நகரின் பிரதான பகுதியில் சுமார் 20 சென்டிமீட்டர் வரையிலான பனிப்பொழிவு பதிவானது.
அதிகபட்சமாக 35 சென்டிமீட்டர் வரையிலான பனிப்பொழிவு, கியூபெக் சிட்டி பகுதி மற்றும் கோட்-நோர்ட் (Côte-Nord) பகுதிகளில் பதிவாகியுள்ளது.


