கியூபெக் மாகாணம் கனடாவில் இருந்து பிரிந்து தனிநாடாக மாறுவதற்கு “50 சதவீதம் + 1” என்ற சாதாரண பெரும்பான்மை மட்டும் போதாது எனப் பிரதமர் மார்க் கார்னி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தின் ‘தெளிவுச் சட்டத்தின்’ (Clarity Act) கீழ், ஒரு நாடு பிரியும் போது அதன் முடிவு மிகத் தெளிவானதாக இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் ஒரு பகுதியைத் தனிநாடாக அறிவிக்க “தெளிவான பெரும்பான்மை” (Clear Majority) அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்க முடியாது என்றும், அது சட்டரீதியான மற்றும் பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கும் என்றும் பிரதமர் கார்னி வாதிட்டார்.
1998-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு தெளிவான கேள்விக்கு (Clear Question) மக்கள் வழங்கும் தெளிவான ஆதரவு இருந்தால் மட்டுமே பிரிவினை சாத்தியம் எனக் குறிப்பிட்டார்.
பிரதமரின் இந்த அறிவிப்புக்குக் கியூபெக் பிரிவினைவாதத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
” கியூபெக் மக்களின் விருப்பத்தைத் தடுக்க ஒட்டாவா தன்னிச்சையான விதிகளைத் திணிக்கிறது” எனப் பார்ட்டி கியூபெக்வா (PQ) தலைவர் பால் செயின்ட் பியர் பிளமண்டன் சாடியுள்ளார்.
எதிர்வரும் அக்டோபரில் கியூபெக்கில் நடைபெறவுள்ள தேர்தலில் பிரிவினைவாதக் கட்சிகள் வெற்றிபெறும் வாய்ப்புள்ள நிலையில், முன்கூட்டியே தடையை ஏற்படுத்தப் பிரதமர் முயல்வதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
