Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் மாகாண அரசுக்கு எதிராக 7,000 டாக்சி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கூட்டுப் போராட்டம்

ஜூன் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண அரசுக்கு எதிராக 7,000 க்கும் மேற்பட்ட டாக்சி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்துள்ள கூட்டுப் போராட்டம் தற்போது நாட்டின் உச்ச நீதிமன்றத்தை (Supreme Court of Canada) எட்டியுள்ளது.

உபர் (Uber) போன்ற செயலி வழி போக்குவரத்துச் சேவைகளின் வருகையினாலும், மாகாண அரசின் புதிய சட்டங்களினாலும் தங்களின் டாக்சி உரிமப் பத்திரங்கள் (Taxi Permits) சந்தை மதிப்பை இழந்துவிட்டதாகக் கூறியே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அண்மையில் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, டாக்சி உரிமையாளர்கள் இந்த சட்டப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கியூபெக் மாகாண அரசு கடந்த 2019 ஆம் ஆண்டில் கொண்டு வந்த புதிய போக்குவரத்துச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலம், பாரம்பரிய டாக்சி உரிமப் பத்திர முறை (Permit system) முற்றாக ஒழிக்கப்பட்டது.

இதனால், பல தசாப்தங்களாகத் தங்களின் வாழ்நாள் முதலீடாகக் கருதி, லட்சக்கணக்கான டொலர்கள் கொடுத்து வாங்கிய உரிமப் பத்திரங்களின் மதிப்பு, ஒரே இரவில் பூஜ்ஜியமாக மாறியதாக டாக்சி உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முன்பு கியூபெக் அரசாங்கம் டாக்சி உரிமங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி வைத்திருந்ததால், மொன்றியல் மாநகரில் ஒரு டாக்சி உரிமப் பத்திரத்தின் சந்தை மதிப்பு 2014 ஆம் ஆண்டில் 180,000 டொலருக்கும் அதிகமாகக் காணப்பட்டது.

இருப்பினும், 2014 ஆம் ஆண்டில் உபர் நிறுவனம் எவ்வித உரிமக் கட்டுப்பாடுகளுமின்றி சந்தைக்குள் நுழைந்ததால், பாரம்பரிய டாக்சித் தொழில் கடுமையாக முடங்கியது.

இது அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஒரு மறைமுக சொத்து அபகரிப்பு (Disguised expropriation) என்று விமர்சித்துள்ள டாக்சி உரிமையாளர்கள், தாமா மெடலஸ் (Dama Metellus) என்பவரை முதன்மை மனுதாரராகக் கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வார இறுதி நாட்களில் சேவைகளை தாமதமாக ஆரம்பிக்கவுள்ள REM ரயில் சேவை
அடுத்த செய்தி மொன்றியல் பிராந்தியத்திற்கு அவசர நிதியுதவி வழங்கிய கியூபெக் அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியல் அருகே சரக்கு ரயில் தடம்புரள்வு

ஜூலை 18, 2026
கியூபெக்

 திறந்தவெளியில் தீ மூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய கியூபெக் மாகாண அரசு

ஜூலை 14, 2026
கியூபெக்

மக்களுக்கு நிதியுதவித் திட்டங்கள் முற்றிலும் அவசியமானவை – முதல்வர் கிறிஸ்டினா பிரெஷெட்

மே 25, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் வணிகநிறுவனங்கள் கைகோர்க்க வேண்டியது அவசியம்

பிப்ரவரி 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?