Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் மாகாண அரசுக்கு எதிராக 7,000 டாக்சி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கூட்டுப் போராட்டம்

ஜூன் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண அரசுக்கு எதிராக 7,000 க்கும் மேற்பட்ட டாக்சி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்துள்ள கூட்டுப் போராட்டம் தற்போது நாட்டின் உச்ச நீதிமன்றத்தை (Supreme Court of Canada) எட்டியுள்ளது.

உபர் (Uber) போன்ற செயலி வழி போக்குவரத்துச் சேவைகளின் வருகையினாலும், மாகாண அரசின் புதிய சட்டங்களினாலும் தங்களின் டாக்சி உரிமப் பத்திரங்கள் (Taxi Permits) சந்தை மதிப்பை இழந்துவிட்டதாகக் கூறியே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அண்மையில் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, டாக்சி உரிமையாளர்கள் இந்த சட்டப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கியூபெக் மாகாண அரசு கடந்த 2019 ஆம் ஆண்டில் கொண்டு வந்த புதிய போக்குவரத்துச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலம், பாரம்பரிய டாக்சி உரிமப் பத்திர முறை (Permit system) முற்றாக ஒழிக்கப்பட்டது.

இதனால், பல தசாப்தங்களாகத் தங்களின் வாழ்நாள் முதலீடாகக் கருதி, லட்சக்கணக்கான டொலர்கள் கொடுத்து வாங்கிய உரிமப் பத்திரங்களின் மதிப்பு, ஒரே இரவில் பூஜ்ஜியமாக மாறியதாக டாக்சி உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முன்பு கியூபெக் அரசாங்கம் டாக்சி உரிமங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி வைத்திருந்ததால், மொன்றியல் மாநகரில் ஒரு டாக்சி உரிமப் பத்திரத்தின் சந்தை மதிப்பு 2014 ஆம் ஆண்டில் 180,000 டொலருக்கும் அதிகமாகக் காணப்பட்டது.

இருப்பினும், 2014 ஆம் ஆண்டில் உபர் நிறுவனம் எவ்வித உரிமக் கட்டுப்பாடுகளுமின்றி சந்தைக்குள் நுழைந்ததால், பாரம்பரிய டாக்சித் தொழில் கடுமையாக முடங்கியது.

இது அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஒரு மறைமுக சொத்து அபகரிப்பு (Disguised expropriation) என்று விமர்சித்துள்ள டாக்சி உரிமையாளர்கள், தாமா மெடலஸ் (Dama Metellus) என்பவரை முதன்மை மனுதாரராகக் கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வார இறுதி நாட்களில் சேவைகளை தாமதமாக ஆரம்பிக்கவுள்ள REM ரயில் சேவை
அடுத்த செய்தி மொன்றியல் பிராந்தியத்திற்கு அவசர நிதியுதவி வழங்கிய கியூபெக் அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

சர்வதேச மோசடி வழக்கில் சிக்கியுள்ள கிளின் கிராஸ்லி

மே 8, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் லாச்சீன் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

நவம்பர் 17, 2025
கியூபெக்

அமைச்சரவையின் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ள கிறிஸ்டின் ஃப்ரெச்செட்

ஏப்ரல் 14, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மாஃபியா குழுவோடு தொடர்புடையதாகக் கருதப்படும் நபர் ஒருவரின் இல்லத்தின் மீது நடத்த திட்டமிட்ட தீவைப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

மே 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?