கியூபெக் மாகாணத்தின் டெரெபோன் (Terrebonne) தொகுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத்தேர்தலில், வாக்களிப்புச் செயற்பாட்டில் புதிய முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்களுக்குப் பிடித்த வேட்பாளரின் பெயரை வாக்குச்சீட்டில் கையால் எழுத வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டின் தேர்தல் முறைமையில் மாற்றம் கோரும் “Longest Ballot Committee” என்ற போராட்டக் குழு, இந்த இடைத்தேர்தலில் திட்டமிட்டு ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளது.
இதனால் இத்தேர்தலில் 48 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏற்படக்கூடிய குழப்பத்தைத் தவிர்க்கும் வகையிலேயே, டெரெபோன் (Terrebonne) தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரின் பெயரை வாக்குச்சீட்டில் கையால் எழுத வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அல்பர்ட்டாவின் ஒரு தேர்தல் தொகுதியில் 200 வேட்பாளர்கள் போட்டியிட்டபோது இதே முறை பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
