மொண்ட்ரியல் நகரின் பொது இடங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்த உதவும் திட்டத்திற்கான நிதியை, மொண்ட்ரியல் மாநகராட்சி நிர்வாகம் 90 சதவீதம் குறைத்துள்ளது.
மொண்ட்ரியல் நகரின் புதிய மேயர் சொராயா மார்டினெஸ் ஃபெர்ராடா தலைமையிலான இந்த நடவடிக்கை, சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்டுக்கு 3 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டு வந்த இந்தத் திட்டத்திற்கு, 2026-ஆம் ஆண்டுக்காக வெறுமனே 354,000 டொலர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இது முந்தைய நிதியை விட 90 சதவீதம் குறைவாகும் என விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2027-ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொண்ட்ரியல் நகரின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, சுமார் 79 மில்லியன் டொலர்களைச் சேமிக்கும் நோக்கில் இந்த ‘கடினமான முடிவு’ எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் தரப்பு தெரிவித்துள்ளது.
