ஆபிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சோமாலிலாந்தை இஸ்ரேல் நேற்று முன்தினம் (28) தனிநாடாக அங்கித்திகரித்தது.
இந்நாடு சோமாலியாவின் ஒரு பகுதியாக இருந்த நிலையில் 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு பிரிந்து தன்னாட்சியுடன் சோமாலிலாந்தாக செயல்பட்டு வருகிறது.
எனினும் பிரிட்டன், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், டென்மார்க், தாய்வான் உள்ளிட்ட நாடுகள் தூதரகம் ரீதியிலான உறவை சோமாலிலாந்துடன் பேணி வந்தாலும் இதனை தனி நாடாக எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.
சோமாலிலாந்து ஒரு சுதந்திரம் பொருந்திய நாடாக அங்கீகரிப்பட்டுள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
மேலும் சோமாலிலாந்தின் ஜனாதிபதி அப்திர் ரஹ்மான் முஹமது அப்துல்லாஹியிடம் கல்வி, சுகாதாரம், விவசாய துறை மேம்பாட்டுக்கு உதவுவதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
