உலகில் பல்வேறு நாடுகளில் சீரற்ற வானிலை நிலவுகின்றது. இதன்படி காசா பகுதியில் வாழும் பலஸ்தீனியர்கள் இவ் இன்னல்களுக்கு முகங் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்க்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகின்ற நிலையில், தற்போது குண்டுவீச்சு, முற்றுகை மற்றும் மனித இழப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த சீரற்ற வானிலை புதிய சவாலாக மாறியுள்ளது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவி விநியோகங்களை இஸ்ரேல் தடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், பாதுகாப்பான வீடுகள் இன்றி கூடாரங்களில் வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

