நேற்று (28) யுவதியொருவர் கிங் ஓயாவுக்குள் குதித்து நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜா எல- போபிட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி தற்காலிகமாக கொச்சிக்கடையில் தங்கியிருந்துள்ள நிலையில், தாய் மறுமணம் செய்துகொண்டமையால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது காதலனுக்கு அழைப்பெடுத்து வென்னப்புவ, நைனாமடை பாலத்தினருகில் வரும்படி கூறிவிட்டு, கிங் ஆற்றில் குதித்துள்ளார் யுவதியை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த காதலன் அப் பகுதி மக்களால் காப்பாற்றப்பட்டு மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், யுவதியின் உடல் இன்று பிற்பகல் பாலத்தின் அருகில் மிதந்த நிலையில், அப் பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக உடல் மாரவில ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


