சமூக ஊடகத் தளமான டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு ஆணையகமான அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் 530 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது.
வெளிப்படைத் தன்மை இல்லாததால் குறித்த அபராதத் தொகையை செலுத்துமாறு, டிக்டொக் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 6 மாதங்களுக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்கு இணங்கவும்
உத்தரவிட்டுள்ளது.
ஐரோப்பிய பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாக சீனாவிற்கு மாற்றியதாகவும், அவை சீன அதிகாரிகளின் அணுகலில் இருந்து பாதுகாக்கப்படவில்லை என உறுதிப்படுத்தத் தவறியதாகவும், டிக்டொக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவுக்கு சொந்தமான சமூக ஊடக செயலியான டிக்டொக் நிறுவனம், தங்கள் பயனர்களின் தரவுகள் எங்கு அனுப்பப்படுகின்றன என்பது குறித்து வெளிப்படையாக இல்லையென ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமைக் கண்காணிப்புக் குழு குற்றம்
சுமத்தியுள்ளது.
