சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கடற்பரப்பில் நேற்று(28) இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று மிதந்து வந்த நிலையில் சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ரொக்கட்டின் பாகங்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும் ரொக்கட்டின் (ஏவப்பட்ட ரொக்கட்டின் ‘ஹீட் ஷீல்ட்’ (Heat Shield) அல்லது எரிபொருள் கலனின் ஒரு பகுதி) பாகங்கள் இவ்வாறு மிதந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் ரொக்கட்டுகளின் சிதைவுகள் அவ்வப்போது இலங்கை மற்றும் மாலைதீவு கடற்பரப்புகளில் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த பகுதியில் இரு கடற்படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



