பிலிப்பைன்ஸில் உள்ள மக்கள் குடியிருப்பு கட்டடமொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 8பேர் உயிரிழந்துள்ளனர்.
தீப்பரவலுக்குள்ளான கட்டடத்தின் பெரும்பாலான பகுதி மரத்தால் கட்டமைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாகப் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
3 தளங்களைக் கொண்ட இந்த கட்டடத்தின் 2 ஆவது தளத்திலிருந்த ஆறுபேரும் 1ஆவது தளத்திலிருந்த இருவருமே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கட்டடத்தின் 2 ஆவது தளத்திலேயே தீப்பரவல் ஆரம்பத்தில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.