தாயக மண் மீட்பு போரிலே தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான முன்னாயத்த பணிகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது வருகிறது.
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் பல்வேறு துயிலும் இல்லங்கள் மற்றும் தமிழர் தாயக பகுதியில் பல்வேறு இடங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது
அந்த வகையிலே இன்று (21) காலை தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் வாரத்தினுடைய ஆரம்ப நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது
நான்கு மாவீரர்களை இந்த மண்ணுக்காக கொடுத்த பெற்றோர் ஒருவரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது
இந்த நிகழ்வில் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணி குழு நிர்வாகத்தினர் மாவீரர்களின் பெற்றோர் மாவீரர்களின் உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்
இம்முறையும் வழமை போன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம் பெறும் எனவும் அனைத்து பெற்றோர்களையும் வருகை தந்து இந்த மாவீரர் நாளிலே கலந்து கொள்ளுமாறு பணி குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
