மொன்ட்ரியலின் பொதுப் போக்குவரத்து ஆணையத்தின் (STM) 2,400 பராமரிப்பு ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமானது, தான் கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுத்து வந்த வேலைநிறுத்தத்தை, தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த இடைநிறுத்தம் நேற்று காலை 6 மணி முதல் அமுலுக்கு வந்தது.
எனினும், ஊழியர்களை வேலைக்குத் திரும்பும்படி சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தும் முடிவினை கியூபெக் தொழிலாளர் துறை அமைச்சர் அமுற்படுத்தவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பே, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தொழிற்சங்கத்தின் இந்த முடிவால், மொன்ட்ரியல் நகரத்தில் பேருந்து மற்றும் மெட்ரோ சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
வேலைநிறுத்தத்தை தாங்கள் இடைநிறுத்திய போதிலும், பொதுப் போக்குவரத்து ஆணைய நிர்வாகம் ஆனது, பேச்சுவார்த்தைச் செயற்பாட்டின் போது, சாதகமான நிலையில் இல்லையென தற்போது தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
