இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரி வீதங்கள் தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால், அறிவிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கனடா உள்ளடக்கப்படவில்லை.
14 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரி விகிதங்களை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த புதிய வரிகள் ஓகஸ்ட் 1 ஆம் திகதி அன்று முதல், நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கனடாவுக்கு விதிக்கப்படவிருந்த வரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஜூலை மாதம் 21 ஆம் திகதிக்குள், அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை அமைத்துக் கொள்வதற்கு கனடாவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய வரிகள் குறித்த கடிதங்கள், சேர்பியா, தாய்லாந்து, துனிசியா போன்ற சிறிய அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் உட்பட இதுவரை 14 நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்தக் கடிதங்கள், மேலதிக பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகளைக் குறிப்பிட்டிருந்தாலும், எந்தவொரு பதிலடி நடவடிக்கையும் “அதே போன்ற பதிலடியைச்” சந்திக்கும் என்ற எச்சரிக்கையையும் கொண்டுள்ளன.
