வடக்கு கியூபெக் பிராந்தியமான நுனாவிக்கில், காவல்துறை அதிகாரிகளால் ஏற்படும் துப்பாக்கிச் சூட்டு இறப்பு விகிதம், கியூபெக் மாகாணத்தின் சராசரியை விட சுமார் 73 மடங்கு அதிகமாக உள்ளது.
கியூபெக் மாகாண காவல்துறை கண்காணிப்பு அமைப்பின் தரவுகள் இதனை வெளிப்படுத்தியுள்ளன.
15,000க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நுனாவிக் பிராந்தியத்தில், இந்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம், உடனடி சீர்திருத்தங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பயிற்சி குறித்த ஆழமான பரிசோதனைக்கான அவசர கோரிக்கைகளைத் தூண்டியுள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் காவல்துறை தலையீடுகளின் போது காவல்துறை அதிகாரி அல்லாத ஒரு நபரின் காயங்கள் அல்லது இறப்புகளை விசாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள Bureau des enquêtes indépendantes (BEI) அமைப்பின் தரவுகளை ஊடகம் ஒன்று ஆய்வு செய்தது.
இந்த அமைப்பு நுனாவிக்கில் காவல்துறையால் உயிரிழப்பு ஏற்பட்ட ஆறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது.
நுனாவிக் பிராந்தியத்தில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, அதை விட அதிக மக்கள் தொகை கொண்ட கனடிய பிரதேசங்களான யூகோன் மற்றும் வடமேற்கு பிரதேசங்களின் சராசரியை விட, மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
